ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
படம்: பாதுகாப்பு
வரிகள்: கண்ணதாசன்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ரத்தினத்தில் செய்து வைத்த
சித்திரத்தின் மண்டபத்தில்
உறவோ உறவோ உறவோ உறவோ
பத்து விரல் தொட்டிழுத்து
அர்த்தமுள்ள சேதி சொல்ல
வரவோ வரவோ வரவோ வரவோ
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
மலரில் பனியிட்ட கலை
மஞ்சள் முகத்துக்கு திரை
பெண்ணில் நீ ஒரு சிலை
இன்று நான் அதன் விலை
கனியில் ஊறிய முகம்
கரும்பில் வாங்கிய ரசம்
ரதியை மீறிய சுகம்
இன்று நான் அதன் வசம
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
இறைவன் ஆலயமணி
இதுவும் தேவனின் பணி
அணிந்த மங்கல அணி
அன்பு இல்லறம் இனி
ஒன்று என்பது வரம்
இரண்டு என்பது மணம்
மூன்று என்பது குலம்
முடிவில்லாதது சுகம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
நதியில் இருபக்கம் கரை
நடுவில் எழுவது அலை
அலையை மீறிய நடை
வாழ்க்கை தோணியின் கதை
முல்லை என்பது நிலை
குறிஞ்சி என்பது குணம்
மருதம் என்பது மணம்
வாழ்ந்து வளர்ப்பது இனம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ரத்தினத்தில் செய்து வைத்த
சித்திரத்தின் மண்டபத்தில்
உறவோ உறவோ உறவோ உறவோ
பத்து விரல் தொட்டிழுத்து
அர்த்தமுள்ள சேதி சொல்ல
வரவோ வரவோ வரவோ வரவோ
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
No comments:
Post a Comment