Friday, March 7, 2014

Saturday, February 8, 2014

வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் தெளித்துவலஞ்செய்யும்

வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்
ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லை
அளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்று
தெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய். 454

Wednesday, January 29, 2014

கன்னி நதியோரம் மின்னி விளையாடும் - நீர்க்குமிழி - 1965

கன்னி நதியோரம் மின்னி விளையாடும் - நீர்க்குமிழி - 1965


கன்னி நதியோரம்
மின்னி விளையாடும்
உன் அழகு மேனி
என்ன கதை கூறும்

வண்ண விழி மேடை
வண்ண விழி மேடை
வந்த இளம் பேடை
சின்ன இடையோடு டு டு
சேர்ந்து இசை பாடும்

கன்னங்கள் கோடி பெறுமோ
கைகளில் ஆடி வருமோ
கன்னங்கள் கோடி பெறுமோ
கைகளில் ஆடி வருமோ
எண்ணங்கள் பொங்கி வருமோ
இன்பத்தை பங்கு தருமோ

தானாக ஓடி வருமோ
தழுவாமல் ஆசை தீருமோ
நாணத்தை பெண்மை விடுமோ
நான் என்ன சொல்ல வேண்டுமோ

வண்ண விழி மேடை
வந்த இளம் பேடை
சின்ன இடையோடு டு டு
சேர்ந்து இசை பாடும்

முந்தானை முகவுரையோ
முக்கனிக்கு ஒன்று குறையோ
முந்தானை முகவுரையோ
முக்கனிக்கு ஒன்று குறையோ
செந்தேனில் தெளிவுரையோ
சேர்ந்ததும் முடிவுரையோ

பெண்மேனி ஊஞ்சல் வேண்டுமோ
பொழுதெல்லாம் ஆடவேண்டுமோ
பாலாற்றில் நீந்த வேண்டுமோ
பசியாறித் தூங்க வேண்டுமோ

கன்னி நதியோரம்
மின்னி விளையாடும்
உன் அழகு மேனி
என்ன கதை கூறும்

ng=ngk nj=njs ndh=wth dr=R ttr=RR tr=R ee=ii oo=uu

Tuesday, January 28, 2014

அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க - கல்யாணமாம் கல்யாணம் - 1974

அத்தை மகன் வந்திருக்கான் மெத்தை விரிக்க - கல்யாணமாம் கல்யாணம் - 1974

இளமை நாட்டிய சாலை - கல்யாணமாம் கல்யாணம் - 1974

இளமை நாட்டிய சாலை - கல்யாணமாம் கல்யாணம் - 1974

கண்ணதாசன்

Monday, January 27, 2014

வருவான் மோகன ரூபன் என - பொன்னூஞ்சல் - 1972

வருவான் மோகன ரூபன் என - பொன்னூஞ்சல் - 1972

வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்
வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல 
பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள
பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள 

வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

காதல் நிலவு பாதி இரவு
மயக்கத்தில் ஆடும் உலகம்
கிள்ளை போல்பாட்டு
வெள்ளித் தேரோட்டு
மொட்டு வண்ணத் தென்றல்
என்னைத் தாலாட்டுது

வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்

வானம் திறந்து ஊர்வசி வந்தாள்
வளைத்துக்கொள் வாய்யா அழகி
பெண்ணுக்கோர் கீதம்
கண்ணுக்கோர் பாடம்
கட்டிக்கொண்டு மெல்ல மெல்ல 
சொன்னாலென்ன?

வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல
பொன்முத்து மேனி பெண்ணென்று சொல்ல 
பூவிதழ் ஓரம் தேன்தமிழ் துள்ள 

வருவான் மோகன ரூபன் என 
காத்திருந்த கன்னியிவள் மோகினியானாள்