வரச் சொல்லடி... அவனை
படம் : பாதுகாப்பு
குரல் : பி. சுசீலா
பாடல் : கண்ணதாசன்
நடிகை : ஜெயலலிதா
ராகம் : சாருகேசி
வரச் சொல்லடி... அவனை
வரச் சொல்லடி... அந்தி மாலைதனில்
அவனை வரச் சொல்லடி
என் வாயார ஒரு முத்தம் நானாகத் தரவேண்டும்
வரச் சொல்லடி... அவனை
வரச் சொல்லடி....
தெய்வானை போல் என்னை நினைத்தாலென்ன - என்
செந்தூரம் கரைந்தோட அணைத்தாலென்ன
கையோடு கை கொஞ்சம் கலந்தாலென்ன - ஆ ஆ
கையோடு கை கொஞ்சம் கலந்தாலென்ன - நான்
கல்யாண சுகம் யாவும் அறிந்தாலென்ன - நான்
கல்யாண சுகம் யாவும் அறிந்தாலென்ன
வரச் சொல்லடி... அவனை
வரச் சொல்லடி....
மலைக் கோவில் குமரேசன் அறியாததா - என்
மடி என்ன கதை சொல்லத் தெரியாததா
கலைக் கோயில் அவன் காண முடியாததா - அது
கனிவானதா கொஞ்சம் பதமானதா
வந்தானை.. சேலையொடு முந்தானை
காதலொடு கண்டானை தேனருவி கொண்டானை
வந்தானை.. சேலையொடு முந்தானை
காதலொடு கண்டானை தேனருவி கொண்டானை
பக்திச் சுவையுடன் தித்தித்தொரு இதழ்
முத்துத் தரும் என நின்றானை
வள்ளிக் குறமகள் அள்ளிப் பருகிட
பள்ளித் தலம் வரை சென்றானை
முருகனை குமரனை கந்தனை வேலனை
முருகனை குமரனை கந்தனை வேலனை
வசந்தம் நிறைந்து மயங்கும் இரவில்
மானிவள் ஆனந்த சாலைக்கு
வரச் சொல்லடி...
என் வாயார ஒரு முத்தம் நானாகத் தரவேண்டும்
வரச் சொல்லடி...
அவனை வரச் சொல்லடி....
No comments:
Post a Comment